Monday 30 December 2013

என் இரண்டாவது சிறுகதை - நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எழுதியது (1993)

என்னுடைய நான்காம் வகுப்பு நோட்டுப் புத்தகத்தில் நான் எழுதியிருந்த அந்த இரண்டாவது கதை இதுதான்.

----------------------------------------------------------------------------------------------------------
ராஜாவுக்கு நாய்க்குட்டிகள் ரொம்ப பிடிக்கும். அப்படிதான் அன்று தெருவில் இருந்த ஓரு நாய்க்குட்டியை தன் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போய்விட்டான்.

தினமும் அந்த நாய்க்குட்டியை நன்றாக பார்த்துக்கொண்டான். தினமும் அந்த நாய்க்குட்டிக்கு பிஸ்கெட், தயிர்சாதம், பால் எல்லாம் கொடுத்தான். அந்த நாய்க்குட்டியுடன் தினமும் விளையாடினான்.

ஆனால், கொஞ்ச நாட்களில் அந்த நாய்க்குட்டியை பராமரிப்பதை விட்டுவிட்டான். கடைசியில் அந்த நாய்க்குட்டியை தெருவில் விட்டான். அது கொஞ்ச நாட்களில் உடல் நிலை மோசமாகி, செத்துப்போனது.

அந்த நாய்க்குட்டியின் ஆவி, தன்னை சரியாக பார்த்துக்காத ராஜாவை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று நினைத்தது. ஒரு நாயினுள் புகுந்தது அந்த ஆவி.

ஒரு நாள் ராஜா மொட்டை மாடியில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தான். அன்று அந்த நாய் படிக்கட்டு ஏறி, மொட்டை மாடிக்குப் போய், அங்கிருந்து ராஜாவைக் கீழே தள்ளிவிட்டது.

தரையில் விழுந்தான் ராஜா. அடி பட்டு ரத்தம் வந்தது. அப்போது அந்த நாய்க்குட்டியின் ஆவி, அவன் முன் வந்தது. அதைப் பார்த்ததும் "ஸாரி, தெரியாம உன்ன விட்டுட்டேன். இனிமே இப்படி செய்யமாட்டேன்" என்று அழுதான்.

அதற்கு அந்த ஆவி, "அப்படீன்னா, இந்த நாயை நீ தான் பாத்துக்கணும்" என்று சொன்னது. அதற்கு சரி என்றபடி தலையாட்டினான் ராஜா. இதைப் பார்த்து அந்த நாய்க்குட்டிக்கும், நாய்க்கும் சந்தோசம்.
----------------------------------------------------------------------------------------------------------

எப்படி இருக்கிறது இந்தக் கதை? சின்ன வயசுல "வா அருகில் வா", "மனைவி ஒரு மாணிக்கம்", "அதிசய மனிதன்" படங்களை எல்லாம் பார்த்தால், இந்த மாதிரி எல்லாம் தோணும்..

No comments:

Post a Comment